புதுச்சேரியில் கஜா புயலால் கடலில் அடித்து வரப்பட்ட மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்ட மக்கள் இதில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு, உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்த புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில் விலங்குகள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மர்மப் பொருள் ஒன்று கஜா புயலால் கரை ஒதுங்கியுள்ளது. புதுச்சேரி காலாப்பேட் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து கடலோரக் காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கப்பல் செல்ல வழிகாட்டியாக பயன்படும் போயோ மோரிங் என்ற உருளையாக இருக்கக் கூடும் என்பது சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அந்த பொருள் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?