பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் விக்ரம்சிங்கே இன்று சந்திக்கிறார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைப் போரில் இந்திய அரசு உதவியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தன்னை கொலை செய்ய இந்திய உளவுத்துறை முயற்சித்ததாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.
இலங்கை அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. அத்துடன் இந்திய புலனாய்வு அமைப்பு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே இந்திய வருகை தந்துள்ளார். அவருடன் இரண்டு அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர். இன்று பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. ராஜ்பக்சே பேச்சு, சிறிசேன குற்றச்சாட்டு போன்ற சர்ச்சைகள் எழும்பிய நிலையில், இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் வாந்ததாக கருதப்படுகிறது.
Read Also -> ’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!