கணவர் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி தானும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே கணவன்- மனைவி என்ற உறவு ஆத்மார்த்தமான உணர்வுகளுள் ஒன்றானது. ஆயிரம்பேர் கூட்டத்தில் இருந்தாலும் தன் கணவர் என்ன செய்கிறார் என்பதை மனைவியின் கண்கள் அறியும். பார்த்தும் பார்க்காதுபோல் இருந்தாலும் மனைவியின் மனதை புரிந்து வைத்திருப்பார் கணவர். அப்படிப்பட்ட கணவர் தற்கொலை செய்த காரணத்தினால் துக்கம் தாங்காத மனைவி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கம்பக்கத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சுதாகர். 65 வயதான இவர் திருப்பதியில் வசித்து வந்தார். இந்நிலையில் திருப்பதி ரேணிகுண்டா அருகே ரயில் தண்டவாளத்தில் சுதாகர் சடலமாக கிடந்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே இறப்பதற்கு முன் தன் சாவுக்கு யாரும் காரணமில்லை என சுதாகர் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
சுதாகர் இறந்தது தொடர்பான செய்தியை அவரது மனைவி வரலட்சுமியிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். உடனே துடிதுடித்து போன வரலட்சுமி சம்பவ இடத்திற்கு ஓடியுள்ளார். அங்கே கணவர் சடலமாக இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் கண்ணீர்மல்க வரலட்சுமி நின்றுகொண்டிருந்த நேரத்தில் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த வரலட்சுமி தானும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?