காஞ்சிபுரத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து நூதன முறையில் இரண்டு புதிய கார்களை திருடிய தொழிலாளர்கள் சிக்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலையில் இரண்டு புதிய கார்கள் காணாமல் போனது குறித்து, புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்நிறுவனத்தில் வாகன தளவாடங்கள் பிரிவில் பணிபுரியும் மாரிமுத்து, அருண்குமார் ஆகியோர் கார் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் இரண்டு புதிய கார்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிமுத்து தான் பயன்படுத்தி வந்த பழைய காரின் பதிவு எண்ணெய் புதிய காருக்கு இணைத்து நிறுவனத்திற்கு வெளியே காரை கடத்தியுள்ளார். ஒரு காரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில், மற்றொரு காரை அருண்குமாருக்கு 6 லட்சத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'