மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை என்றால் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பி அப்போலோ மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சில மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த நேரத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் அப்போலோ மருத்துவர்கள் உறுதியாக ஆஜாராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை பல கோடி ரூபாய் பெற்றுள்ளது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை அப்போலோ இயக்குனர்களுக்கும் பொருந்தும் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், அப்போலோ தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா உள்ளிட்ட மருத்துவர்கள் வரும் நாட்களில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!