பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், இம்ரான் கானுக்கு ஏற்கெனவே வாழ்த்துகள் தெரிவித்துவிட்டதாகதாவும் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியை காரணம் காட்டி தன்னால் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஒரு கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பலமுறை இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் இந்தியர்களுடன் நல்ல முறையில் உரையாடி உள்ளார். அவருக்கு இந்தியாவை பற்றி தெரியும். இந்தியா- பாகிஸ்தான் உடனனான உறவுகளை பொறுத்தவரையில் இம்ரான் கான் மீது எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க உள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!