12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை முதல் அதிகபட்சம் மரண தண்டனை வரை விதிக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தற்போது குறைந்த பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதை 10 ஆண்டுகளாக உயர்த்தவும் புதியசட்டத்திருத்தம் வழிவகுக்கிறது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியரை வன்கொடுமைக்கு ஆளாக்கும் போது குறைந்த பட்சம் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையிலிருந்து அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கும் போது குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறையிலிருந்து அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். மேலும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 2 மாதத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் எனவும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கப்படாது எனவும் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தார். இம்மேசாதா அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!