எங்களுக்கே தண்ணீர் இல்லை.. எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு தர முடியும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டது. “பிரதமர், அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவுத் திட்டத்தை அமைச்சரவைக்கு அனுப்பமுடியவில்லை. எனவே வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வழங்க வேண்டும்” என மத்திய அரசின் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அப்போது அரசியல் காரணங்களை காட்டி மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த மாதம் தமிழகத்திற்கு கர்நாடகா அரசு 4 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, எங்களுக்கே தண்ணீர் இல்லை. எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியும் என கேள்வி எழுப்பினார். காவிரி நீரை தமிழகத்திற்கு திறப்பது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் சித்தராமையா கூறினார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!