பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜிங்பெங்கை சந்திக்க உள்ளார்.
2 நாள் அரசு முறை பயணமாக வரும் 27 ஆம் தேதி சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 28ம் தேதி அதிபர் சி ஜிங்பெங்கை சந்திக்கிறார். இச்சந்திப்பு ஹுபெய் மாகாணத்தின் வுஹான் நகரத்தில் நடக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். டோக்லாம் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே கசப்புணர்வு அதிகரித்திருந்த நிலையில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.
மேலும் சர்வதேச அரசியல், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் அமெரிக்காவுக்கு கடும்போட்டியாக சீனா உருவெடுத்து வரும் நிலையில் இந்திய பிரதமரை சீன அதிபர் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மோடி, பிரதமர் ஆன பின் அவர் சீனா செல்வது இது 4வது முறையாகும்.
இதனிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு சீனாவில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'