இந்தியாவில் ஆரோக்கியம் மிகுந்தவர்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதம், தடுப்பு ஊசி நடவடிக்கை, முறையான பிரசவம், ஹைச்.ஐ.வி. சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இந்த ஆய்வை நிதி ஆயோக் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டடது. அதன்முடிவில் சுகாதாரமான பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
உத்தரபிரதேஷ், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மாநிலங்களில் சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுகாதாரமான சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்திலும், மணிப்பூர் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் லட்சத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி