சென்னையை அடுத்த பட்டரவாக்கத்தில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக புறநகர் ரயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அழகர்சாமி, வன்முறை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 3 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புறநகர் ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 7 குழுக்கள் மூலம் புறநகர் ரயில்களில் கண்காணிப்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ரயில்களில் சாதாரண உடைகளிலும் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், வன்முறை உள்ளிட்ட புகார் தொடர்பாக 182 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே காவல் ஆய்வாளர் எச்சரித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!