குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், குஜராத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரம் தோல்வி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மோடியின் பிம்பத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே குஜராத் தேர்தல் முடிவு காட்டுவதாகவும் அவர் கூறினார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதாவிற்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளதாகவும் கூறினார். குஜராத்தில் முந்தைய தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா தற்போது 99 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டு, ஆட்சியை தக்கவைத்தது. 61 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இம்முறை 77 இடங்களில் வெற்றிவாகை சூடியது எனவும் சுட்டிக்காட்டினார். நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின்போது வளர்ச்சி, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசவில்லை என்று கூறிய ராகுல், மோடியின் நம்பகத்தன்மையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்