ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் குடும்பத்தில் ஒருவருக்கு காவல்துறையில் பணி வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் இழப்பு காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் சோகத்தில் ஆழந்துள்ள ஆய்வாளர் மனைவி மற்றும் மகன்களை ஆவடியிலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளை பிடிக்க வெளியூர் செல்லும் காவல்துறையினரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?