கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையின் முதல் மதகு உடைந்த விவகாரத்தில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி கேஆர்பி அணையின் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டது. உடைந்த மதகை மாற்றி புதிய மதகு அமைக்கும் பணியை 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 20 அடி உயரமுள்ள உடைந்த மதகு அகற்றப்பட்டு, அங்கு 12 அடி உயரமுள்ள புதிய மதகு பொருத்தப்பட உள்ளது. கோடை காலத்தில் அணையின் மதகுகள் முழுவதுமாக பழுதுநீக்கப்பட்டு மீண்டும் உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணையை பழுது நீக்க ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்