பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சிறு-குறு தொழில்கள் நலிவடைந்தன என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முறையாகத் திட்டமிடாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறு-குறு தொழில்களும் நலிவடைந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்த நாள், வேதனையான தினம் என்று அவர் விமர்சித்தார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்நது எதிர்ப்போம் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.
இதேபோன்று கோவை, சேலம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. உரிய முன்னேற்பாடுகள் இன்றி நடைபெற்ற பண மதிப்புநீக்க நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!