Published : 04,Nov 2017 03:45 PM
ரேபரேலி தேசிய அனல் மின் நிலைய விபத்து: ராகுல்காந்தி நேரில் ஆறுதல்

ரேபரேலி தேசிய அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது குஜராத் தேர்தல் பயணத்தை முடித்துக் கொண்டு ரேபரேலி சென்று, தேசிய அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்திற்கு அனல் மின்நிலைய நிர்வாகத்தினரின் அலட்சியமான போக்கே காரணம் என காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததாகக் கூறிய ராகுல், இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.