நிலவேம்பு குடிநீரை பயன்படுத்துவதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆய்வு இதழில் நிலவேம்பு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 3 வயது குழந்தை முதல் 79 வயதுடைய நபர் வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 176 பேருக்கும் நோய் பாதிக்காத இயல்பு உடல் நிலை கொண்ட 352 பேருக்கும் நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் கிருமியை எதிர்க்கும் சக்தி நிலவேம்புக்கு இருப்பதும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை நிலவேம்பு கட்டுப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை நிலவேம்பு குடிநீரை பருகலாம் என ஆராய்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நடத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவை உதவி செய்துள்ளன.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!