வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வளையாம்பட்டு ரயில்வே கேட் அருகே, சென்னை மார்க்கத்தில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது இன்று காலை தெரியவந்தது. இதனையடுத்து ஏலகிரி, யஷ்வந்த்பூர், திருவனந்தபுரம் விரைவு ரயில்களும், அரக்கோணம் பயணிகள் ரயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டை கோட்ட உதவி பொறியாளர் அபிஷேக் வர்மா தலைமையில் 20-க்கும் அதிகமான ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்காலிகமாக விரிசல் சரி செய்யப்பட்டு அந்த தடத்தில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இன்று மாலைக்குள் 13 கிலோ மீட்டர் தொலைவு தண்டவாளம் மாற்றப்படும் என்றும் அதன் பின்னரே ரயில்கள் வழக்கமான வேகத்தில் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!