நீட் தேர்வை இன்று வைத்தாலும் அதை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கு இருக்கிறது என பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
நீட் தேர்வுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்கா நத்தத்தில் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் நீட்-ஐ வைத்து ஆதாயம் தேடுவதற்காக அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர்.
காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்று நீட் தேர்வு வைத்தாலும் அதை சந்திக்கும் தெம்பும் திராணியும் எனக்கு உள்ளது என்றார். திமுக எத்தகையப் போராட்டத்தை நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று தமிழக இளைஞர்கள் கூற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide