நீட் தேர்வை இன்று வைத்தாலும் அதை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கு இருக்கிறது என பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
நீட் தேர்வுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்கா நத்தத்தில் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் நீட்-ஐ வைத்து ஆதாயம் தேடுவதற்காக அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர்.
காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்று நீட் தேர்வு வைத்தாலும் அதை சந்திக்கும் தெம்பும் திராணியும் எனக்கு உள்ளது என்றார். திமுக எத்தகையப் போராட்டத்தை நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று தமிழக இளைஞர்கள் கூற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்