ஓசூர் அருகே கனமழை காரணமாக தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால், மாணவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி காட்டு பகுதியில் பெய்த பலத்த மழையால், தொட்டல்லா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில், தொட்டல்லா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் நான்காவது முறையாக அடித்து சென்றது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மீண்டும் தற்காலிக பாலம் அமைப்பதை கைவிட்டு நிரந்தர பாலம் அமைத்தால் மட்டுமே அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?