வட கொரியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வாகாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் தாண்டி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அத்துடன் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளிட்ட பல சக்தி வாய்ந்த வெடிகுண்டு சோதனைகளிலும் ஈடுபட்டது. இதுபோன்ற சம்பவங்களால் உலக நாடுகள் பலவும் வடகொரியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக வடகொரியா மீது பலதரப்பட்ட பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜப்பான் மீது ஏவுகணையை பறக்க விட்டு அபாயகரமான சோதனை ஒன்றையும் வடகொரியா நிகழ்த்தியுள்ளது. இதற்கு ஜப்பான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அனைத்தும் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிராகவே நடத்தப்படுவதாக சர்வதேச நாடுகள் கருதுகின்றன.
இந்நிலையில் வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 25 ஆண்டுகள் பொறுமைக்கு பிறகு வடகொரியாவுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்போவதாகவும், இனி பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!