இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி வீரராக மாற சிறிது காலம் ஆகும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஆக்ரோஷமான பேட்டிங்கால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விராட் கோலியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது, கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்த விராட் கோலி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து அளப்பரிய சாதனைகளை படைத்த கோலியின் தலைமைப் பொறுப்பு, மூன்றே மாதங்களில் 3 வகையான போட்டிகளில் இருந்தும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில்...
2020 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்படனாக இருந்த நாள் அந்த பொறுப்பில் இருந்து விலகி வீரராக மாறியதை மேற்கோள் காட்டியுள்ள தினேஷ் கார்த்திக், விராட் கோலியின் அதே மாற்றத்திற்கு 'சிறிது காலம்' ஆகும் என்று கூறியுள்ளார். 'இது மிகவும் வித்தியாசமான கட்டம். கோலி அவ்வாறு இருக்க விரும்ப மாட்டார். அதே நேரத்தில் அணிக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குகிறார்' என்று கார்த்திக் கூறியுள்ளார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!