கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17,934 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 15,379 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 88,959 பேர் தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 7300 பேர் மருத்துவமனையிலும், 82000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
4,039 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் சென்னையில் தொற்று உறுதியாகும் சதவீதம் 21.3% எனவும், தமிழகத்தில் 11.3% எனவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 17,934 பேரில் 36 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 10652 பேர் ஆண்கள், 7282 பேர் பெண்கள்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 7372 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு 1840 பேர், கோவை 981, திருவள்ளூர் 931, காஞ்சிபுரம் 620, மதுரை 498, நெல்லை 451, திருச்சி 444, ராணிப்பேட்டை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?