Published : 18,Dec 2021 07:43 PM
இமாச்சலப் பிரதேசம்: மைனஸ் டிகிரிக்கும் கீழ் சென்ற வெப்பநிலை - உறையும் சிஸ்சு ஏரி!

வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மைனஸ் டிகிரிக்கும் கீழான வெப்பநிலை நிலவி வருவதால் உறைபனி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஹௌல் பகுதியில் உள்ள சிஸ்சு (Sissu) ஏரி உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் படங்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
Himachal Pradesh: Sissu Lake in Lahaul freezes over as several areas in the state experience sub-zero temperatures. pic.twitter.com/rP3XVo0NbF
— ANI (@ANI) December 18, 2021
மணாலியில் நடப்பு சீசனின் முதல் பனிப்பொழிவு கடந்த வெள்ளி அன்று ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏரி உறைந்துள்ளது.