தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். இம்முடிவால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தம் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஓபெக்கின் கூட்டம் நடைபெறுகிறது. உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும். உற்பத்தி அதிகரிக்கப்படாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து ரூ. 101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளாகவும் உள்ளது
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!