மேலூரை தொடர்ந்து சென்னையில் வருகிற 23-ந்தேதி டி.டி.வி.தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள அவர் மதுரை மேலூரில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் வருகிற 23-ந்தேதி தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 29-ந்தேதி பெரியகுளத்தில் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவலை தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளருமான புகழேந்தி மதுரையில் இன்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெரிய குளத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு தினகரன் ஆதரவாளர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், மதுரை மேலூரில் திரண்டு வந்த கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல என்றும் கூறினார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'