நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனை அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன் ஆஜராகினர். ஆனால், ஆஜரான மூவரும் பொய்யான குற்றவாளிகள் எனக் கூறி கோழி அருள்ராஜ் என்பவர், கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் துறையினரை மிரட்டும் விதத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் செல்போன் சிக்னல் மூலம் தொடர் விசாரணை நடத்தி வந்த நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் அருள்ராஜ் தனது சித்தப்பா மகன் தினகரனின் வீட்டில் தஞ்சம் அடைந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருநெல்வேலியில் இருந்து அம்பத்தூர் விரைந்தனர்.
இதையடுத்து உதவி ஆணையர் உதவியுடன் சென்னை போலீஸ் குழு மற்றும் திருநெல்வேலி போலீஸ் குழுவினர், கோழி அருள்ராஜ் தங்கியிருந்த வீட்டை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவரது சித்தப்பா மகன் தினகரனையும் கைது செய்து அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவரை எப்போது நெல்லைக்கு அழைத்துச் செல்லலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர் .சென்னையில் பிரபல ரவுடி ஒருவனை துப்பாக்கி முனையில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?