கொரோனா வைரஸ் சீன பரிசோதனை கூடத்தில் இருந்து கசியவில்லை என்றும், வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு மூலம் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. வுகானில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக ஒரு தரப்பினரும், சீனாவில் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய போது கசிந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து கண்டறிய உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உணவுச் சந்தை, ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பிறகு அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், கொரோனா வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் வவ்வாலில் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவியிருக்க சாத்தியம் உள்ளது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குளிரூட்டப்பட்ட உணவு மூலம் பரவியிருக்காது என்றும், பரிசோதனை கூடத்தில் இருந்து கசிய வாய்ப்பே இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ