அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (35). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கோணலம் பகுதியில் வசிக்கும் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரனின் நிலத்திற்கு அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலின் மீன் பிடிப்பதற்காக தனது மகனுடன் பாக்கியராஜ் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி வயலில் விழுந்து பாக்கியராஜ் துடித்துள்ளர்.
இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்க முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம் என்பவர் தனது வயலில் உள்ள பயிர்களை எலியிடம் இருந்து காப்பதற்காக வைத்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் மீன் வளத்துறை வருவாய்த்துறை உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமாக செல்வம் என்பவர் நிலத்திற்கு மின் கம்பத்தில் இருந்து திருட்டுத் தனமாக மின்சாரம் எடுத்து வயலுக்கு மின்சார வேலி அமைப்பது குறித்து மின்வாரிய துறையினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை