திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.
மு0த்துப்பேட்டையை அடுத்த கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். 35 வயதான் ராஜேஷ் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்காடு கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார். இன்று காலை தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆலங்காடு அருகே மறைந்திருந்த மர்மகும்பல் அவரை விரட்டிச்சென்றது.
இருசக்கர வாகனத்தில் நிற்காமல் அவர் தொடர்ந்த நிலையில் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் அவரின் தலையை துண்டித்து அருகே வீசிவிட்டு தப்பியது. கொலை செய்யப்பட்ட ராஜேஷ்மீது 2015ஆம் ஆண்டு மதன் கொலை தொடர்பான வழக்கு, 2020ஆம் ஆண்டு வினோத் என்பவரை கொலைசெய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Loading More post
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை