தஞ்சையில் இருபத்தி இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை வெண்ணாற்றங்கரை பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தஞ்சை வட்டாட்சியர் மற்றும் தஞ்சை மேற்கு காவல் துறையினர் விரைந்து சென்றபோது வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு சொகுசு காரில், இருபத்தி இரண்டரை கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்ததும் அதற்கு துணையாக இருசக்கர வாகனத்தில் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் சுதாரித்துக் கொண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்படும்போது தப்பிக்க முயன்றனர். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி, அம்மாபேட்டையை சேர்ந்த பாண்டியம்மாள், கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சங்கர் கணேஷ் மாத்தூரை சேர்ந்த ஹரி பாண்டி உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
Loading More post
இந்தியா: நேற்று ஒரே நாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
90களின் பிற்பகுதியிலிருந்து கர்ணன்.. அதிருப்தி குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!
சென்னையில் கனமழை; அடுத்த 3 மணி நேரத்திற்கும் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
வாக்குப்பதிவின்போது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் - மம்தா