நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்தார்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலத்திற்கு சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்தார். அதுகுறித்து கூறுகையில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று கூறினார். மேலும் கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு மோடியிடம் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை இந்த சூழ்நிலையில் பிரதமரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
அதேசமயம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்துள்ளார். மேலும் அதிமுகவில் பல திருப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜனவரி 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அத்துடன் அதே நாளில் காங்கிரஸ் தலைவரான ராஜீவ் காந்தியும் தமிழகத்திற்கு வருகைதரவிருக்கிறார்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?