சேலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த 9 மாதமாக மூடியிருந்த பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும்ம் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நேற்று சேலம் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'