திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கொட்டப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல இலட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வெளியே விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். ஆனால், மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால், தற்போது நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தொடர் மழை காரணமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதே போல, திருவாரூர் மாவட்டம் மாவட்டம் மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை