அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம், 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ட்ரம்ப்புக்கு எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவருக்கு ஆதரவாக 197 உறுப்பினர்களும் வாக்களித்தனர். குடியரசு கட்சி உறுப்பினர்கள் 10 பேர், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தும் இங்கே கவனிக்கத்தக்கது.
ட்ரம்ப்பின் பதவிக் காலம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் செனட் சபையில் ட்ரம்ப் மீது விசாரணை நடைபெறும். செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தால் ட்ரம்ப் பதவி நீக்கப்படுவார்.
கடந்த 6ஆம் தேதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். நாடாளுமன்றத்தில் வன்முறை செய்ய தூண்டினார் என்பதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு.
முன்னதாக, ஜோ பைடனை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக ட்ரம்ப்புக்கு எதிராக 2019-இல் ஏற்கனவே பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!