மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் திருநங்கை, தனது காளைக்காக பல சிரமங்களை சந்தித்தும் அதனை பாசத்தோடு பராமரித்து வருகிறார்.
தனது காளையை பற்றி பாட்டு பாடி பெருமைப்படும் மதுரை மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை இளவரசன். கடந்த ஐந்தாண்டுகளாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். கடந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக தனது காளையை வாடிவாசலில் அவிழ்த்து விட்ட நிலையில், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி வாகை சூடியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து ஆயத்தப்படுத்தி வருகிறார். திருநங்கை என்பதால் கேலி செய்வதை தவிர்த்து தங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று கூறும் இளவரசன், இந்த காளை தனது சகோதரனை போன்றது என்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளை வாடிவாசலை விட்டு சீறிப்பாயும் தருணம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்று கூறும் இளவரசன், தனது காளையை பார்க்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை என்கிறார். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. உணர்வு சார்ந்த கொண்டாட்டம் என்பதுதான் உண்மை என்றார்.
Loading More post
இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்- சென்னைவாசிகளுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
”ஆக்ஸிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியையும் எடுக்கத் தயார்” - மத்திய அரசு
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மு.க.ஸ்டாலின்!
அசாம் வரும் அனைவருக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிப்பு
இந்தியா: 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ