வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய பின்னர், ட்விட்டரில் இருந்து அவரின் ஆதரவாளர்களின் கணக்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களில் ஒரு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது வன்முறை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடைய 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுத்திவைத்ததாக ட்விட்டர் நேற்று அறிவித்தது.
"வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்த சிறிது நேரத்திலேயே, ட்விட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நடந்த எங்கள் முயற்சிகளின் விளைவாக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு தனி நபர் பல கணக்குகளை இயக்கும் பல நிகழ்வுகளையும் கண்டறிந்தோம்" என ட்விட்டர் தெரிவித்தது.
நவம்பர் 3-ஆம் தேதி வெளியான அமேரிக்க தேர்தலின் முடிவை ஏற்க மறுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய ட்ரம்பின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன. இந்த இரு தளங்களும் எதிர்கால வன்முறை அபாயத்தைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்பதற்கு முன்பு, ஜனவரி 17 ம் தேதி அமெரிக்க கேபிடல் மற்றும் ஸ்டேட் கேபிடல் கட்டடங்கள் மீது இரண்டாவது தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக இவை கூறியது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?