புனேவிலிருந்து கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மருந்துகள் இன்று காலை தமிழகத்திற்கு வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிப் போடப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஒரு டோஸ் மருந்து 200 ரூபாய்க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!