இன்று சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறினார்.
பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் இந்தாண்டு புதிய புரட்சி ஏற்படும். கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக. அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால் கோஷ்டி சேர்க்கும் ஆட்களே இல்லை.
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த இயக்கமும் அடையாத வெற்றியை அதிமுக பெற வேண்டும். மனமாச்சரியங்களை களைந்து, வேறுபாடுகளை மறந்து கட்சியின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒற்றுமையுடன் செயல்படுங்கள். இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்