"வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கூறினார்.
முதல்வர், துணை முதல்வர் தலைமையிலான அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வரும் சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும்.
தமிழகத்தை ஆளக் கூடியத் தகுதி அதிமுகவுக்கு உள்ளது என்ற நற்சான்றிதழை மக்கள் கொடுத்துள்ளனர்.
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால், கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதாக நம்புகிறேன். 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். அதிமுகவில் சிலீப்பர் செல்களுக்கு வாய்ப்பே இல்லை. சிலர் வெளியே வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிய > 'கூட்டணியை ஓபிஎஸ், இபிஎஸ் இறுதி செய்வர்' - அதிமுகவின் 16 தீர்மானங்கள்
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு