ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை அறிவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அணியின் தேர்வுக்குழு இந்த அறிவிப்பை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடியது. அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் அளித்துள்ள பேட்டியில் "ஸ்டீவ் ஸ்மித்துக்கு மீண்டும் துணைக் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும். மேலும் இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார். ஸ்மித்தை மீண்டும் அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்துகள் உலவி வரும் சூழலில் கில்கிறிஸ்ட் இவ்வாறு கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு