காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குளம் சீரமைப்பு பணி முறையாக நடைபெறாததால் குளக்கரை சரிந்து விழுந்துள்ளது.
தமிழக அரசு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, வரத்து கால்வாய்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரி சீரமக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்திரம்பாக்கம் பகுதியில் உள்ள மாரிதாங்கல் குளக்கரையை சீரமைக்க அரசு, 18.32 லட்சம் நிதி ஒதுக்கியதாக தெரிகிறது.
ஆனால், அந்த குளக்கரை சீரமைக்கப்பட்ட சில நாட்களிலேயே மழையால் சரிந்து விழுந்ததுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரமைத்த ஒப்பந்ததாரரை அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்க தவறியதாலும், குளக்கரையை சுற்றி பெரிய கற்கள் எதுவும் போடாமல் வெறும் சிமெண்டை மட்டும் பூசி, அதன் மேல் பெயின்ட் அடித்து கணக்கு காட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு நிதி 18.32 லட்சம் என்ன ஆனது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை