இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியர் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் பெற்றோராக உள்ளனர். தற்போது கோலி ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணியோடு ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மா மும்பையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் தீபாவளி திருநாளை கோலி இல்லாமல் கொண்டாடி அந்த அனுபவங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.
“புத்தாடை அணிந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டேன். இந்த அனுபவம் நன்றாக உள்ளது” என சொல்லியுள்ளார்.
அந்த பதிவில் தனது வெள்ளை நிற குர்த்தாவான தீபாவளி புத்தாடையோடு நிற்கின்ற படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் சைகையாலே பேசிக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவிட்டு டெஸ்ட் தொடரில் பாதியில் நாடு திரும்ப உள்ளார். அவருக்கு குழந்தை பேறுகால விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது பிசிசிஐ.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்