ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
அபுதாபியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 99 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
99 ரன்களில் அவுட்டானதால் ஏமாற்றமடைந்த கெயில் தன்னுடைய பேட்டை தூக்கி வீசினார். பின்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு கை குலுக்கிவிட்டு சென்றார். பின்பு பேசிய கெயில் "“180 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட் விளையாட நன்றாக உள்ளது. இரவில் விளையாட சூப்பராக இருக்கும். 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான்" என்றார்.
I know if I was bowling I know he wasn't getting da 100 — Jofra Archer (@JofraArcher) February 22, 2013
இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் எப்போதோ போட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. 2013 இல் ஆர்ச்சர் போட்டி ட்வீட்டில் "நான் பவுலிங் போட்டிருந்தால் அவரை 100 ரன்களை எடுத்திருக்க விடமாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். பின்பு 2016 இல் "கிறிஸ் கெயில் அவர்களே சதம் அடிக்க நினைத்து உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
ஜோப்ரா ஆர்ச்சரின் இதற்கு முந்தைய ட்வீட்டுகள் கூட மிகவும் பிரபலம். அதாவது கிரிக்கெட்டில் நடக்கும் பல விஷயங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?