சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சாலையை சீர்செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்ல கூடிய சாலையில் மாமண்டூரில் இருந்து புக்கத்துறை கூட்டு சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சாலை பராமரிப்புக்காக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பள்ளங்கள் சரிசெய்யாமல் கிடக்கின்றன. இதில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
மேலும் இப்போது மழை காலம் என்பதால் மழைநீர் அந்த பள்ளத்தில் தேங்கினால் பள்ளம் பெரிய பள்ளமாகி பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த சாலையில் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் ஒரு விபத்து ஏற்பட்டால் தொடர்ச்சியாக பல விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்தும் சாலையை சீரமைக்க வில்லை. பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்