தனது தாயார் அவரது தோடை 600 ரூபாய்க்கு அடகு வைத்து படிக்க வைத்ததால் இன்று காவல்துறை டிஐஜி ஆகியுள்ளேன் என திண்டுக்கல் காவல் சரக துணை தலைவர் முத்துச்சாமி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். கொடைக்கானல் கீழ்மலை பழங்குடி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அந்நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கள்ளக்கிணறு பழங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க, திண்டுக்கல் காவல் சரக துணை தலைவர் முத்துச்சாமி வந்திருந்தார். நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த தொண்டு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 80 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய அவர், அக்கிராமத்தில் உள்ள குழந்தைகள், படிப்பின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் என்று பேசினார்.
அவர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், அவரின் மேல்படிப்பிற்காக அவரது தாயார் தோடை 600 ரூபாய்க்கு அடகு வைத்து, படிப்புக் கட்டணம் செலுத்தியதாகவும், அவரின் தாயார் அவ்வாறு செய்யாதிருக்காவிட்டால், இன்று, இவ்வளவு பெரிய உயர் பதவியை அடைந்திருக்க முடியாது என்று, அங்கு கூடியிருந்த மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.
மேலும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கள்ளக்கிணறு கிராமத்திற்குச் செல்லும் பாதையை சீரமைக்கவும், கிராமத்தின் முன்பு ஓடும் காட்டாற்றை கடக்க பாலம் அமைக்கவும் முயற்சிகள் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். அதேபோல அக்கிராமத்தில் இருந்து வருடம் ஐந்து நபர்களை சமூக அமைப்பின் உதவியோடு படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காவல்துணை தலைவரின் கனிவான அணுகுமுறை அக்கிராம மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?