மருந்து மூலப் பொருள்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது வேதனையளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் நிறுவனத்துக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை, மருந்து துறையின் இணைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரையும் நாம் இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக இருந்து வந்ததை சுட்டிக்காட்டினார்.
மருத்துவ மூலப் பொருட்களுக்கு 90 சதவீதம் அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பி இருப்பதால், தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு ஒரே நாட்டை மட்டுமே நம்பி இருப்பது அண்டை நாட்டின் அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாக சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?