அபுதாபியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று சேர்ந்துவிட்ட நிலையில், அமீரகத் தலைநகர் அபுதாபியில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இயலுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அபுதாபியில் கொரோனா அதிகம் பரவி வருவதைக் கட்டுப்படுத்த அமீரகத்துக்கு வரும் அனைத்து நுழைவுப் வாயில்களிலும் தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் அபுதாபி மைதானத்தை தவிர்த்துவிட்டு, போட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!