பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மூலிகை மரங்கள், வனவிலங்குகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் டாப்சிலிப் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். கொரானா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை செய்யபட்டுள்ளது, இதானல் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் தற்போது பச்சைபசேல் என சோலைவனமாக மாறியுள்ளது. டாப்சிலிப் செல்லும் வனச்சாலையின் இருபுறமும் வான்உயர்ந்த தேக்குமரங்களும், முலிகைமரங்களும் கண்கொள்ள காட்சியாக உள்ளது.
மேலும் டாப்சிலிபில் உள்ள புல்மேடு மற்றும் யானை சவாரி செய்யும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது, வாகன போக்குவரத்து குறைந்து, வனத்துறையினர் மற்றும் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மட்டுமே வந்து செல்வதால் காட்டுமாடு, காட்டுயானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கொரானா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதால் டாப்சிலிப் வனப்பகுதியின் குளிர்ச்சியையும் அழகையும் கண்டுகழிக்கும் வாய்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு பறிபோயுள்ளது. கொரானா காலத்தில் வீடு வேலை என வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ள மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு சென்றுவர அனமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!