வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் இந்தியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் 80 சதவிகித்தினர் அலுவலகம் சென்று பணிபுரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகிறார்கள். பொது போக்குவரத்துகள் இன்னும் பல மாநிலங்களில் தொடங்கப்படாததால் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்கும் சூழல் தொடர்ந்து வருகிறது. ஐ.டி., முதற்கொண்டு பல்வேறு துறையினரையும் வீட்டிலேயே முடக்கியபடி வேலைப் பார்க்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா தொற்று.
இது குறித்து ஜேஎல்எல் ஆசிய பசிபிக் என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் 82 சதவிதி இந்தியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அலுவலகம் சென்று பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அங்கு சங்க ஊழியர்களுடன் சேர்ந்து வேலைப் பார்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டு பணி புரிவதையே 82 சதவிகித இந்தியர்கள் விரும்புவதாகவும், மேலும் சில வேலைகளை வீட்டில் இருந்தே செய்யக் கூடிய வகையில் தேவையான உபகரணங்களை உபயோகிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக தினசரி அலுவலகம் சென்று வருவது ஒரு கடமை என்றும் அதையும் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறவர்கள் மிஸ் செய்வதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை